Traker

Monday, October 11, 2010

நபி வழியில் நம் தொழுகை - 10 (அத்தஹிய்யாத்)

அத்தஹிய்யாத் இருப்பு முறை

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் தஷஹ்ஹுதில் அமரும்போது தமது வலது கையைத் தமது வலது தொடைமீதும், இடது கையைத் தமது இடது தொடைமீதும் வைத்து ஆட்காட்டி விரலால் இஷாராச் செய்வார்கள். அவர்களின் பார்வை அவர்களின் இஷாராவைக் கடந்து செல்லாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, தாரமி

இருப்பில் ஓதவேண்டியவை



"அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு" என தொழுகையில் அமரும்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறச் சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி,முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

பொருள்: எல்லாவிதமான கண்ணியங்களும் தொழுகைகளும் நல்லறங்களும் இறைவனுக்கே உரியது. நபியே! உம்மீது சாந்தியும் இறைவனின் அருளும் விருத்தியும் உண்டாகட்டுமாக! மேலும், எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக! வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

கடைசி இருப்பில் அமரும் முறை

"எந்த ரக்அத்தில் ஸலாம் கொடுக்க வேண்டுமோ அந்த இருப்பில் (அல்லாஹ்வின் தூதர்) அவர்கள் இடது காலை (வலது காலுக்கு கீழ்) வெளிப்படுத்தி தங்களது அமரும் இடத்தை தரையில் வைத்தும் அமர்ந்தனர்" அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி



கடைசி இருப்பில் அத்தஹியாத்தை ஓதியவுடன் கீழ்காணும் ஸலவாத்தை ஓதவேண்டும்.

ஸலவாத் ஓதுதல்

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது صلى الله عليه وسلم அவர்களின் மீதும், முஹம்மது صلى الله عليه وسلم வர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களுக்கும், முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

ஸலவாத்துக்குப் பிறகு ஓத வேண்டியவை



அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி, வஅவூது பிக மின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பிக மின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத் அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் மஃஸமி வல் மக்ரமி. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத்

பொருள்: இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தஜ்ஜால் என்பவனின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவதை விட்டும், கடன் தொல்லையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.



"அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அந்த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அந்தல் கஃபூருர் ரஹீம்" என்ற துஆவை நான் தொழுகையில் ஓதுவதற்காக நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்தார்கள். அறிவிப்பவர்: அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُநூல்கள்: புகாரி, முஸ்லிம்

பொருள்: இறைவா! எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன்னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்.

அத்தஹிய்யாத், ஸலவாத், துஆக்கள் ஓதிய பிறகு "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" என்று கூறி தொழுகையை முழுமைப்படுத்திட வேண்டும்.

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ

"தொழுகயின் திறவு (உளூ எனும்) தூய்மையாகும். (உலகத் தொடர்புகளை) தடை செய்வது தக்பீர் கூறுவதாகும். அதிலிருந்து விடுபடுவது தஸ்லீம் ஆகும்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

ஸலாமு கூறி முகத்தை வலப்புறமும், இடப்புறமும் நன்கு திருப்ப வேண்டும். தன் கன்னத்தின் பகுதியை பின்னால் உள்ளவர்கள் பார்க்குமளவுக்கு திருப்ப வேண்டும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது வலப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு தமது இடப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு சலாம் கூறியதை நான் கண்டேன். அறிவிப்பவர்: ஸஅது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ

இதுதான் தொழும் முறையாகும்.
Share

நபி வழியில் நம் தொழுகை - 09 (ஸஜ்தாவின்.. - 2 )

ஸஜ்தாவின் போது கூறவேண்டியவை

நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தாவின் போது

سُبْحَانَ رَبَّيَ الأَعْلَى

"ஸுப்ஹான ரப்பியல் அஃலா" என்று ஓதுவார்கள்.

பொருள்: உயர்வுமிக்க என் இறைவன் தூயவன். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ,

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது ருகூவிலும், சுஜுதிலும்

سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ

"ஸுப்புஹுன் குத்துஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்" என்று கூறுவார்கள்.

பொருள்: வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் இறைவன் தூய்மையானவன், பரிசுத்தமானவன். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ,

سُبْحاَنَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ

ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மஃக்பிர்லீ என்று நபி صلى الله عليه وسلم ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இரண்டு சஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டியவை

رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டு சஜ்தாக்களுக்கிடையே ரப்பிக் ஃபிர்லீ ரப்பிக் ஃபிர்லீ" என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அபூதாவூத்

பொருள்:இறைவா! என்னை மன்னிப்பாயாக! இறைவா! என்னை மன்னிப்பாயாக!

நபி صلى الله عليه وسلم இரண்டு சஜ்தாக்களுக்கிடையே

اَللَّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ وَعَافِنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ

"அல்லாஹும்மஃக்பிர்லீ வர்ஹம்னீ வஆஃபினி வஹ்தினீ வர்ஜுக்னீ" என்று ஓதுவார்கள்.

பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நிவாரணமளிப்பாயாக! எனக்கு வழி காட்டுவாயாக! எனக்கு தேவையானவற்றை வழங்குவாயாக! அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதீ

ஒற்றை ரக்அத்களிலிருந்து எழும்போது அமர்ந்துவிட்டு கைகளை ஊன்றி எழவேண்டும்

"நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றிவிட்டு எழும்போது உட்காராமல் நிலைக்கு வரமாட்டார்கள்" அறிவிப்பவர்: மாலிக் பின்அல் ஹூவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதீ

இரண்டாம் ரக்அத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று ஓதத் துவங்கி விடுவார்கள். மவுனமாக இருக்க மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், நஸயீ

இரண்டாம் ரக்அத்தில் அமரும் முறை

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக்கொண்டார்கள். கடைசி இருப்பின்போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
Share

நபி வழியில் நம் தொழுகை - 08 (ஸஜ்தா செய்தல்)

ஸஜ்தா செய்யும் முறை

ஸஜ்தாவுக்காக நபி صلى الله عليه وسلم குனியும்போது அல்லாஹ் அக்பர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

"இரு பாதங்கள், இரு முட்டுக்கால்கள், இரு கைகள், நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறிய சமயம் நெற்றையைக் குறிப்பிடும்போது தமது கையை மூக்கின் மீது வைத்து சுட்டிக் காட்டினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி, முஸ்லிம்

முதலாவதாக கையை தரையில் வைத்தல்

"உங்களில் ஒருவர் சஜ்தாச் செய்யும்போது ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம். தனது முட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைத்தல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஸுஜுது செய்யும்போது தங்கள் கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைப்பார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

முழங்கையை உயர்த்திக் கொள்ளல்

"நீ ஸஜ்தா செய்யும்போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக்கொள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: பராஃபின் ஆஸிப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்

தொடையுடன் வயிற்றை சேர்க்கக் கூடாது

நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தா செய்யும்போது தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் சஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்

கைவிரல்களை நடுநிலையாக வைத்தல்

கைவிரல்களை முழுமையாக விரிக்காமலும், முற்றிலுமாக மூடிவிடாமலும் இரண்டிற்கும் இடைப்பட்ட முறையில் வைக்கவேண்டும்

ஸஜ்தாவில் நடுநிலையை மேற்கொள்ளுங்கள்! தமது கைகளை நாய் விரிப்பதுபோல் உங்களில் எவரும் விரிக்கலாகது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்தல்

ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்யாத ஒருவரை நபி صلى الله عليه وسلم கண்டபோது, "முஸ்லிம்களே எவர் ருகூவிலும் ஸஜ்தாவிலும் தம் முதுகத் தண்டை நிலைப்படுத்தவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை" என்றார்கள். அறிவிப்பவர்: அலீ இப்னு ஷைபான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜ்ஜா
Share

நபி வழியில் நம் தொழுகை - 07 (ருகூவு செய்தல்)

ருகூவு செய்தல்

சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் வேறு வசனங்களை ஓதி முடித்தபின் ருகூவு செய்யவேண்டும்.

ருகூவு செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்

நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நிற்கும்போது தனது இரு தோள் புஜங்கள்வரை இரு கைகளையும் உயர்த்துவார்கள். ருகூவுக்கு தக்பீர் கூறும்போது இதே போல் செய்வார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, இப்னுமாஜ்ஜா

நாங்கள் எங்கள் கைகளை (ருகூவின் போது) முழங்கால்கள் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டிருந்தோம்.
அறிவிப்பவர்: முஸ்அப் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் இரு கைகளால் தமது இரு முழங்கால்களையும் பிடித்துக் கொள்வது போல் வைத்தார்கள். தனது இரு கைகளையும் நாண் போல் தனது விலாப்புறங்களை விட்டு அகற்றி வைத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ, அபூதாவூத்

முதுகை சமமாக வைக்கவேண்டும்

நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் தலையைத் தாழ்த்தவும் மாட்டார்கள்; உயர்த்தவும் மாட்டார்கள். மாறாக இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட விதமாக வைப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், இப்னுமாஜ்ஜா

ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யவேண்டும்

திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன் என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறியபோது, இறைவனின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என நபித்தோழர்கள் கேட்டனர். "தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்

தொழுகையில் கோழி கொத்துவதைப் போல் (அவசரமாகக்) குனிந்து நிமிர்வதை நபி صلى الله عليه وسلم அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்

ருகூவின் போது ஓத வேண்டியவை

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது ருகூவில் "சுப்ஹான ரப்பியல் அழீம்" என்றும் தமது ஸஜ்தாவில் "ஸுப்ஹான ரப்பியல் அஃலா" என்றும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஹுதைபாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ

سُبْحَانَ رَبَّيَ الْعَظِيمِ "சுப்ஹான ரப்பியல் அழீம்"

பொருள்: மகத்துவமிக்க என் இரட்சகன் பரிசுத்தமானவன்.

سُبْحاَنَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ

ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம மஃக்பிர்லீ

பொருள்: எங்கள் இரட்சகனே! உன்னுடைய புகழால் நீ தூய்மையானவன், இறைவா! எனக்கு மன்னிப்பருள்வாயாக.

سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ

"ஸுப்புஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்" என்றும் ருகூவில் நபி صلى الله عليه وسلم ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், முஸ்லிம், அபூதாவூத், நஸயீ

பொருள்: வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் ஜிப்ரீலுக்கும் எஜமானனாகிய இறைவன் மிகத் தூய்மையானவன், பரிசுத்தமானவன்.

ருகூவிலிருந்து எழுதல்

ருகூவிலிருந்து எழும்போது தனது இரண்டு கைகளையும் உயர்த்தி "ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா" என்று கூற வேண்டும்

سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ

பொருள்: புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை இறைவன் கேட்கிறான்.

ருகூவிலிருந்து நிலைக்கு வந்ததும்

பின்னால் உள்ள எதையேனும் ஒன்றை கூறலாம்.

رَبَّنَا لَكَ الْحَمْدُ ரப்பனா லகல் ஹம்து

رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ ரப்பனா வலகல் ஹம்து

اللَّهُمَّ رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ அல்லஹும்ம ரப்பனா வலகல் ஹம்து (புகாரி)

பொருள்: இறைவா உனக்கே புகழனைத்தும்

اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْئَ السَّمَوَاتِ ومِلْئَ اَلآرْضِ ومِلْئَ مَاشِئْتَ مِنْ شَيْئٍ بَعْدُ

அல்லஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில் அஸ்ஸமாவாத்தி வமில் அல் அர்ழி, வமில்அ மாஷிஃத மின்ஷையின் பஃது (நூல்: முஸ்லிம்)

பொருள்: இறைவா! பரக்கத்தும் தூய்மையும் நிறைந்த ஏராளமான புகழ் உனக்கேயுரியது.
Share

நபி வழியில் நம் தொழுகை - 06 (ஓதல்கள்)

தொழுகையின் ஆரம்பத்தில் மட்டும் அவூது ஓதுதல்

ஸனா ஓதி முடித்தபின் "அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" என்று ஆரம்பித்து "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" எனக் கூறி சூரத்துல் பாத்திஹாவை ஓதவேண்டும்.

"(நபியே) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இறைவனிடம் காவல் தேடுவீராக!" (அல்குர்ஆன் 16:98)

اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

பொருள்: எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

முதல் ரக்அத்தில் மட்டும்தான் "அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" கூறவேண்டும். மற்ற ரக்அத்களில் இதனை ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.

"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று ஓதத் தொடங்கி விடுவார்கள். (முதல் ரக்அத்தில் சிறிது நேரம் மவுனமாக இருந்தது போல் இரண்டாம் ரக்அத்தில்) மவுனமாக இருக்கமாட்டார்கள்" (அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, முஸ்லிம்

ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும்போது بسم الله الرحمن الرحيم "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என கூற வேண்டும்.

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) அடுத்து பிஸ்மியை தொடர்ந்து சூரத்துல் பாத்திஹா ஓதவேண்டும்.

சூரத்துல் ஃபாத்திஹா

"சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்கு தொழுகையில்லை" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உபாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ

الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمـنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ


பொருள்:1. சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2. அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4. உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6. நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது) கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.

இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதக்கூடிய ரக்அத்துகளில் எதனையும் ஓதாமல் இமாம் ஓதுவதைத் கேட்கவேண்டும். இமாம் சப்தமிட்டு ஓதாத ரக்அத்துகளில் அவரும் ஓதியாக வேண்டும்.

"குர்ஆன் ஓதப்பட்டால் அதைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். மவுனமாக இருங்கள்" என இறைவன் கூறியுள்ளான். (அல்குர்ஆன் 7:204)

"இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்கே! அவர் தக்பீர் கூறும்பொழுது நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் ஓதும்போது நீங்கள் மவுனமாக இருங்கள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முஸ்லிம்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிந்ததும் "ஆமீன்" கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் ஃசூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும் (தொழவைப்பவரும்) மஃமூமும் (பின் நின்று தொழுபவரும்) சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும்.

"நபி صلى الله عليه وسلم அவர்கள் வலழ்ழாள்ளீன் என்று கூறியதும் முதல் வரிசைக்கு கேட்குமளவிற்கு ஆமீன் கூறுவார்கள்" அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

"இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்" எனக்கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இந்தப் பள்ளிவாசலில் (சுமார்) 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். (அவர்கள்) இமாம் "கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்" எனக் கூறும்போது "ஆமீன்" என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அதா நூல்: பைஹகீ

இந்த ஹதீஸை கவனித்தால் ஆமீன் சப்தமிட்டே கூறவேண்டுமென அறியலாம்.

ஸூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் வேறு வசனங்களை ஓதும் முறை

ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்தபின் குர்ஆனில் வேறு வசனங்களையோ, அத்தியாயங்களையோ ஓதவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்துகளில் ஸூரத்துல் ஃபாத்திஹாவையும் வேறு இரு ஸூராக்களையும் ஓதுவார்கள். ஆறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

முதலிரண்டு ரக்அத்துகளைப் பொறுத்தவரை எல்லா நேரங்களிலும் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதியுள்ளனர். ஆனால் மூன்றாம் நான்காம் ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதியிருக்கிறார்கள். சில சமயங்களில் ஸூரத்துல் பாத்திஹாவுடன் வேறு வசனங்களையும் ஓதியிருக்கிறார்கள். எனவே முதலிரண்டு ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை ஓதவேண்டும். மற்ற இரண்டு ரக்அத்களில் ஃஸூரத்துல் பாத்திஹாவை மட்டும் ஓதலாம். அல்லது வேறு வசனங்களையும் ஓதலாம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்களில் முப்பது ஆயத்துகள் அளவு ஓதுவார்கள். பின்னிரண்டு ரக்அத்களில் பதினைந்து ஆயத்துக்கள் அளவு ஓதுவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்

முழு அத்தியாயமாக ஓதுதல்

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் மிகப் பெரும் ஸுராக்கைைள ஒதித் தொழுவித்து மக்களுக்குக் கஷ்டம் கொடுப்பதை நபி صلى الله عليه وسلم அவர்களிடம் முறையிட்டபோது "முஆதே! நீ குழப்பத்தை ஏற்படுத்துகிறாயா? ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா, வஷ்ஷம்ஸிவலுஹாஹா வல்லைலி இதாயக்ஷா ஆகியவற்றை ஓதியிருக்கலாகாதா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

ஆங்காங்கே சில வசனங்கள் ஓதுதல்

குர் ஆனின் முழு அத்தியாயம் இல்லாமல் அதிலுள்ள சில வசனங்களை மட்டும் ஓதலாம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக் அத்களில் முதல் ரக்அத்தில் பகரா அத்தியாயத்தில் உள்ள கூலூ ஆமின்னா பில்லாஹி (2:136) என்ற வசனத்தையும் இரண்டாம் ரக்அத்தில் "ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்"(3:52) என்ற வசனத்தையும் ஓதினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்

ஒரே அத்தியாயத்தை திரும்பத் திரும்ப ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் இரண்டு ரக்அத்களிலும் இதா ஸுல்ஸிலதில் அர்ளு என்பதையே ஓதினார்கள். நூல்: அபூதாவூத்

ஒரே அத்தியாயத்தை பகுதி பகுதியாக இரண்டு ரக்அத்களில் ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் அஃசராப் ஸூராவை மஃரிபின் இரண்டு ரக்அத்களிலும் பகுதி பகுதியாக ஓதினார்கள். அறிவிப்பவர்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

அத்தியாயங்களை வரிசை தவறி ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் ஒரு நாள் இரவில் தொழுதேன். முதலில் பகரா ஓதி பின்னர் நிஸா ஓதி பின்னர் ஆல இம்ரான் ஓதினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ

இரண்டாம் ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் அதிக அளவு ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தை முதல் ரக்அத்தை நீட்டுவார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
Share

நபி வழியில் நம் தொழுகை - 05 (நிய்யத் & தக்பீர்)

நிய்யத்

எந்த ஒரு வணக்க வழிபாட்டுக்கும் நிய்யத் என்ற எண்ணம் அவசியம். ஆகவே தொழுகை என்ற செயலுக்கும் நிய்யத் எனும் எண்ணம் தேவை.

"செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்ததேயாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

"நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்

தக்பீர் தஹ்ரீமா

தொழுகையில் ஆரம்பமாக கூறப்படும் தக்பீருக்கு தக்பீர் தஹ்ரீமா எனப்படும்.

"நீ தொழுகைக்காக தயாராகிவிட்டால் முழுமையாகச் உளூச் செய்து கஅபாவை முன்னோக்கி "அல்லாஹு அக்பர் எனக்கூறு" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்

அல்லாஹு அக்பர் எனக் கூறி இரு கைகளையும் தோள் புஜங்கள் வரையோ அல்லது காது சோனைகள் வரையோ உயர்த்திட வேண்டும்.

"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது தங்களது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்." என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நின்றால் தங்களது இரு கைகளின் விரல்களும் மடக்கப்படாமல் இருக்கும் விதமாக தம் இரு கைகளையும் உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்." என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ

உயர்த்திய கைகளை நெஞ்சின் மீதுதான் வைக்க வேண்டும்

"நபி صلى الله عليه وسلم அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். மேலும் (தொழுகையில்) வலது கையை இடது கையின் மணிக்கட்டு மீது வைத்து நெஞ்சின் மீது வைத்ததைப் பார்த்தேன்." அறிவிப்பவர்: ஹுல்புத்தாயி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்

"நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களது வலது கையை இடது முன்கை மீதும் இடது மணிக்கட்டின் மீதும் இடது குடங்கை மீதும் வைத்தார்கள்." அறிவிப்பவர்: இப்னு ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் நின்ற போது தங்களது வளக்கையைால் இடககையை பிடித்திருந்ததை நான் பார்த்தேன்." அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டவேண்டும் என்று சில அறிவிப்புகள் இருந்தாலும் அவை அனைத்துமே பலகீனமானவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1, தொழுகையில் தொப்புகளுக்குக் கீழே (இடது) முன்கை மீது (வடது) முன்கையை வைப்பது சுன்னத்தாகும். என அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: அபூதாவூத்

2, தொழுகையில் தொப்புகளுக் கீழே முன்கையை, முன்கை மீது வைத்துக் கொள்ள வேண்டும். என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல்: அபூதாவூத்

இந்த இரண்டு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல் கூஃபி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்களின் வருமாறு:

"பலவீனமானவர்" என இப்னு முயீன், இப்னு ஹிப்பான், அபூஸர்ஆ, அபூஹாதம், இப்னு குஸைமா, உகைலீ, அஜலீ, புகாரி, நவவீ ஆகியோர் விமர்சித்துள்ளனர். "இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டும்" என அபூஹாதம், ஸாஜி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். தம் நூல்களில் பதிவு செய்துள்ள அபூதாவூத் அவர்களும் "இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை அல்ல" என விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செயல்படலாகாது.

3, "தொப்புளுக்கு கீழே கையை வைப்பார்கள்" என இப்றாஹீம் கூறுவதாக ஒரு செய்தி முஸன்னப் இப்னு ஷைபா என்ற நூலில் உள்ளது. ஆனால் அப்படி வைப்பது யார் என்ற விபரமில்லை. மேலும் இப்றாஹீம் என்பவர் நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தைச் சேர்ந்தவரில்லை.

4, அலீ ரலி அவர்கள் நெஞ்சில் தொப்புளுக்கு மேல் கையைக் கட்டியதாக ஜரீர் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபி صلى الله عليه وسلم அவர்கள் நெஞ்சில் கட்டியதாக தெளிவான ஹதீஸ் இருக்கும்போது அதையே ஏற்கவேண்டும்.

ஸனா ஓதுதல் அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறி நெஞ்சில் கைகளைக் கட்டிக் கொண்டதும் ஸனா ஓதவேண்டும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். "இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?" என நான் கேட்டேன். அதற்கு,

اللَّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدتَّ بَيْنَ اْلَمشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقَّنِيْ مِنَ الْخَطَاياَ كَمَا يُنَقَّى اثَّوْبُ الأبْيَضُ مِن الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ


ஸனாவின் பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையை வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக!

இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!

இறைவா! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!

தக்பீர் கட்டியதும் கீழ்காணும் இந்த வாசகங்களையும் கூறலாம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழும் போது அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறியதும்,



பொருள்: இணைவைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமலும், கட்டுப்பட்ட முஸ்லிமாகவும் வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும் என் இதர வணக்கங்களுக்கும் என் வாழ்வும் என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன் இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நீ தூய்மையானவன். நீ புகழுக்குரியவன்.
அறிவிப்பவர் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்
Share

Thursday, September 9, 2010

நபி வழியில் நம் தொழுகை - 04 (ஆடை)

ஆடை

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள். (அல்குர்அன் 7:31)

இந்த ஆடைதான் அணிந்து தொழவேண்டுமென்று நிர்ணயிக்கப்படவில்லை. ஆடையணிவது அவரவர்களின் வசதியை பொருத்தது. ஒரே ஒரு துணி மட்டும் உள்ளதென்றால் அதனை அணிந்து கொள்ளலாம்.

நபிصلى الله عليه وسلم அவர்கள் ஒரே ஒரு ஆடையை அணிந்துகொண்டு அதன் இரு ஓரத்தையும் இரு தோள்களின் மீதும் மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள். அறிவிப்பவர்: உமர்பின் அபீஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

தொடைப்பகுதியை மறைக்க வேண்டும்

"தொடைப்பகுதி மறைக்க வேண்டிய பகுதியாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்." அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

பெண்கள் உடல் முழுவதையும் கண்டிப்பாக மறைக்க வேண்டும். ஆனால் முகம், முன்கை, கால் பாதங்கள் ஆகியவற்றை மறைக்கத் தேவையில்லை. சிலர் தொழுகைக்காக காலுறை அணிகின்றனர். இது கட்டாயம் என்றும் எண்ணுகின்றர். நபி صلى الله عليه وسلم காலத்தில் வாழ்ந்த எந்தப் பெண்களும் காலுறை அணிந்து தொழுததாக எவ்வித ஆதாரமும் இல்லை. விரும்பினால் அணியலாம்.

"நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதார்கள். முஃமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுதார்கள். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார்? என்பதை யாரும் அறியமாட்டார்கள்." அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

பருவமடைந்த பெண்

"பருவமடைந்த பெண் முக்காடில்லாமல் தொழுதால் இறைவன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதி

பார்வையை ஈர்க்ககூடிய வண்ண ஆடைகள்

"நபி صلى الله عليه وسلم அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஒரு ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் "என்னுடைய இந்த ஆடையைக் கொண்டுபோய் அபூஜஹ்ம் வசம் கொடுத்துவிட்டு, அவருடைய (வண்ணங்களில்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன் எனது தொழுகையை விட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது" எனக்கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள்

ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடத்தில் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்கள் வீட்டின் ஒரு ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதை கண்ட நபி صلى الله عليه وسلم ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடம் "உன்னுடைய இந்தத் திரையை நம்மை விட்டும் அகற்றிவிடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறிக்கிடுகின்றன" எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
Share

Wednesday, August 25, 2010

புகை நமக்கு பகை??

வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும் கூடுதலான நபர்கள் ஈடுபடும் செயல் ஆகும் . இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் பலர் கருதுகின்றனர்.  தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை மற்றும் சிலர் எடுத்துக்கொள்கின்றனர்.




Share

Thursday, August 19, 2010

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு கடமை

தொகுத்தவர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.

Share

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் சில



- தொகுத்தவர் உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

நோன்பின் மாண்புகளை சிறப்புகளை குறித்து நபி (ஸல்) அவர்க்ள கூறிய ஆதாரபூர்வமான அநேக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களை மக்கள் தெரிந்து அமல்கள் செய்வதை விட ஆதாரமற்ற செய்திகளை வைத்து அமல்கள் புரிவதில் தான் ரமழானின் காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள்.

Share

Friday, July 2, 2010

நபி வழியில் நம் தொழுகை - 03 (தயம்மும்)

தயம்மும்

சில நேரங்களில் உளூச் செய்வதற்கோ, கடமையான குளிப்பை குளிப்பதற்கோ தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீர் இருந்தும் கடுங்குளிர், நோய் காரணங்களால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீரும் இருந்து பயன்படுத்தக் கூடிய நிலையும் இருந்து உளூச் செய்வதாலோ, கடமையான குளிப்பை குளிப்பதாலோ குடிப்பதற்கு தண்ணீர் இல்லாது போய் விடுமோ என்ற பயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளூவிற்கும் கடமையான குளிப்பிற்கும் மாற்றுப் பரிகாரமே தயம்மும் என்பதாகும்.

தயம்மும் எப்படி செய்வது

இரு கைகளையும் தூய்மையான மண்ணில் ஒரு முறை அடித்து, கையில் படிந்துள்ள தூசியை வாயால் ஊதிவிட்டு முகத்திலும் மணிக்கட்டு வரை இரு கைகளிலும் தடவிக் கொள்வதே தயம்மும் ஆகும்.

"நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் உங்களில் எவரேனும் மலங்களித்து விட்டு வந்தாலும் அல்லது பெண்களைத் தீண்டினாலும் (அந்நேரத்தில்) தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 5:6)

"தயம்மும் என்பது முகத்தில் தடவுவதற்காகவும் கைகளில் தடவுவதற்காகவும் ஒரு தடவை கைகளை தரையில் அடிப்பதாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்" அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத்

மேற்கூறிய இறை வசனத்திலும், ஹதீஸிலும் பொதுவாக கைகள் என்று கூறப்பட்டிருப்பினும் அதே நபித்தோழர் அறிவிக்கும் மற்றோரு அறிவிப்பில் மணிக்கட்டுவரை என்று கூறப்பட்டுள்ளது.

நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் இரு உள்ளங்கைகளாலும் தரையில் அடித்து, அதில் வாயால் ஊதிவிட்டு அந்தக் கைகளை முகத்திலும் மணிக்கட்டு வரை கைகளிலும் தடவி விட்டு "இவ்வாறு செய்வது உமக்குப் போதுமாகும்" என கூறினார்கள். அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத்

தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால்

தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால் உளூச் செய்து மீண்டும் அத்தொழுகையை தொழ வேண்டியதில்லை.

இரண்டு நபர்கள் பிரயாணத்தில் சென்றார்கள். தொழுகை நேரம் வந்தது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவே, அந்த இருவரும் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து தொழுதனர். பின்பு, அத்தொழுகையின் நேரத்திலேயே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்து விட்டது. அப்போது அந்த இருவரில் ஒருவர் உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுதார். இன்னொருவர் தொழவில்லை. பிரயாணத்திலிருந்து ஊர் திரும்பியதும் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இதனை அவ்விருவரும் கூறினர். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை மீண்டும் தொழாத நபரை நோக்கி, "நீர் எனது வழிமுறையைக் கடைபிடித்தீர். (தயம்மும் செய்து நீர் தொழுத) உமது தொழுகையையே உமக்கு போதும்" என்றும், உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுத நபரை நோக்கி "உமக்கு இரு கூலிகள் உள்ளது" என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்

கடுங்குளிரின் கேடு காரணமாக தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அங்கீகரித்துள்ளார்கள்

"தாதுஸ்ஸலாஸில்" எனும் போருக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள். கடுங்குளிரான ஓர் இரவில் எனக்கு ஸ்கலிதம் ஏற்பட்டு விட்டது. குளித்தால் எனக்குக் கேடு ஏற்படும் எனக் கருதிய நான் தயம்மும் செய்து என் தோழர்களுக்கு ஸுப்ஹு (அதிகாலை தொழுகை) தொழுவித்தேன். மதீனாவிற்கு நாங்கள் திரும்பியதும் என் செயல் பற்றி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் என் தோழர்கள் கூறினர். உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள் "அம்ரே! குளிப்பு கடமையான நிலையில் உம் தோழர்களுக்குத் தொழுவித்தீராமே" என்று என்னிடம் கேட்டார்கள். "உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்ற இறை வசனம் என் நினைவுக்கு வந்ததால் தான் தயம்மும் செய்து தொழுதேன்" என்றேன். இதனை கேட்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் சிரித்தார்களே தவிர குறை காணவில்லை. அறிவிப்பவர்: அம்ர்பின் அல்ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்

மேற்கண்ட ஹதீஸிலிருந்து குளிரின் காரணமாகத் தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது
Share

Friday, June 11, 2010

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர் (ஹதீஸ்)

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)




குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.

Share

Monday, May 17, 2010

நபி வழியில் நம் தொழுகை - 02 (வுளு)

தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்யும் முறை

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது இரண்டு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத்,, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்

உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் உளூச் செய்தபோது தண்ணீரில் கையை நுழைத்து தண்ணீர் எடுத்து தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்தார்கள். மேலும் இப்படித்தான் நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தார்கள் என்றும் கூறினார்கள். இப்னு அபீ முலைக்கா நூல்: அபூதாவூத்

அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ஒளுச் செய்யும்போது இரண்டு கைகளையும் மூன்முறை கழுகி, முகத்திஅயும் மூன்றுமுறை கழுகி தலைக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மஸஹு செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு அபீலைலா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூது

மஸஹ் என்பது ஈரக்கையால் தலையையும் காதுகளையும் தடவுவதாகும் மஸஹ் ஒருமுறை செய்யவேண்டும். சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை.

கால்களை கழுவுதல், குதிகால்களையும் சரியாக கழுவுதல்

உளூவின் இறுதிச் செயலாக கால்களைக் கரண்டை வரை கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் கால்களைக் கரண்டைவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்

கால்களை கழுவும்போது கவனமாகக் கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் "குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்" என்று கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

உளூவை வரம்பு மீறிச் அதிகமாக செய்யலாகாது

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது ஒவ்வொரு தடவை கழுவினார்கள். இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதி, நஸயீ, அபூதாவூத்,, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்துள்ளார்கள். அப்துல்லாஹ் பின் ஸைது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, அஹ்மத்

நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து உளூச் செய்வது பற்றிக் கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் மும்மூன்று தடவை கழுவி உளூச் செய்து காட்டிவிட்டு, இதுதான் உளூச் செய்யும் விதமாகும். யார் இதைவிட அதிகப்படுத்துகிறாரோ அவர் வரம்பு மீறி விட்டார்; தீங்கிழைத்து விட்டார்; அநியாயம் செய்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐபு رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜ்ஜா

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

ஒருவர் உளூச் செய்து விட்டு காலுறை அணிந்து பிறகு உளூ முறிந்து விட்டால் திரும்ப உளூச் செய்யும்போது அவர் காலுறையைக் கழற்ற வேண்டிய அவசியமில்லை. காலைக் கழுவவேண்டிய நேரத்தில் காலுறையின் மேல் பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால் போதுமானது. கடமையான குளிப்பின்போது மட்டும் கட்டாயம் கழற்ற வேண்டும்.

நான் ஒரு பிரயாணத்தின்போது நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (உளூச் செய்யும்போது) அவர்களது இரு கால் உறைகளையும் நான் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை விட்டுவிடும்; கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு அவ்விரு கால் உறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: முகீரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நாங்கள் பிரயாணத்தில் இருந்தபோது "ஜனாபத் தவிர மலஜலம், தூக்கம் போன்றவற்றிற்காக காலுறையை மூன்று பகல், மூன்று இரவுகள் கழற்றவேண்டிய அவசியமில்லை" என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு அஸ்ஸாவ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, திர்மிதி, இப்னுமாஜ்ஜா, இப்னுகுஸைமா

உளூச் செய்தபின் கூறவேண்டியவை

أَشْهَدُ أَنْ لاَّ إلَهَ إِلَهَ إِلاَّالله وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًاعَبْدُهُ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹு லாஷரீகலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால் சுவனத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்

பொருள்: வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை; அவன் ஏகன்; அவனுக்கு நிகராக எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் உள்ளார்கள் என உறுதியாக நம்புகிறேன்
Share

Thursday, May 13, 2010

நபி வழியில் நம் தொழுகை - 01 (உளூ)

பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத் துவங்குதல்

بســـم الله நூல்கள்: அபூதாவூத்,இப்னு மாஜ்ஜா, அஹ்மத்.

உளூவை வலப்புறத்திலிருந்து ஆரம்பித்தல்

நீங்கள் உளூச் செய்தால் வலப்புறமிருந்து துவங்குங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா

கைககளை மணிக்கட்டு வரை கழுவுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது தமது இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவினார்கள். அவ்ஸ் பின் அவ்ஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ

பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உளூச் செய்வோர் முதலில் இரு கைகளையும் கழுவிய பின்பே அப்பாத்திரத்தில் கையை விடவேண்டும்.

"உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் கையை மூன்று முறை கழுவதற்கு முன் தனது கையைப் பாத்திரத்தில் விடக்கூடாது" என صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்

பாத்திரத்திலிருந்து ஒளூச் செய்தால்

உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்செய்து (பாத்திரத்திலிருந்து) ஊற்றி மூன்று முறை மணிக்கட்டு வரை கழுவினார்கள். பிறகு தனது வலது கையை பாத்திரத்தில் நுழைத்து வாய் கொப்பளித்தார்கள். நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு மூன்றுமுறை முகத்தைக் கழுவினார்கள். இரண்டு கைகளாலும் மூன்றுமுறை முழங்கை வரை கழுவினார்கள். பின்பு தலைக்கு மஸஹு செய்தார்கள். பின்பு இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் இப்படித்தான் ஒளூச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்

பல் துலக்குதல், வாய் கொப்புளித்தல், மூக்கைச் சுத்தம் செய்தல்

உளூச் செய்யும்போது பல் துலக்குவதை நபி صلى الله عليه وسلم அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

"என சமுதாயத்திற்குச் சிரமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத், அஹ்மத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தபோது வாய் கொப்பளித்து மூக்கிற்கு (வலது கையால்) தண்ணீரை செலுத்தி இடது கையால் சிந்தினார்கள். அறிவிப்பவர்: அப்துல் கைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

முகம், கைகளை கழுவுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கைகளால் (தண்ணீர்) எடுத்து, தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
Share

Sunday, April 25, 2010

வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்

நிச்சயமாக! முஃமினான அடியானுக்குச் சுவர்க்கத்தில் கொடையப்பட்ட ஒரே முத்தினாலுள்ள கூடாரம் தயார் செய்யப்பட்டிருக்கும். வானில் அதன் உயரம் அறுபது மைல்களாலும். அக்கூடாரத்தில் அவனுடைய குடும்பத்தார்கள் வசிப்பார்கள். அவர்களை அவன் சுற்றிப் பார்த்து வருவான். (கூடாரம் விஸ்தீரணமாக இருப்பதால்) அவர்கள் சிலர், சிலரைப் பார்க்கமாட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

Share

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

‘தரீக்கா’ என்பது ‘சூபியிஸம்’ மற்றும் ‘தப்லீக் ஜமாஅத்’ போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும். இஸ்லாத்தில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆன்மிக நெறி முறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் அறியப்படுகிறது.

Share

மொபைல் போன்கள் - சிறு கேமராக்கள் பெண்கள் எச்சரிக்கை

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள்,
மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய
காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக
சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக
இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல
பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.


Share

Sunday, April 4, 2010

பிற மதத்தவர்களுடன் முஸ்லிம்களின் விவாகத் தொடர்பு

பிறசமூகத்தவருடனான முஸ்லிம்களின் விவாகத் தொடர்பு பற்றிய ஒரு தெளிவுரை

பிறமதத்தவர்கள் எனும் வட்டத்தில் இறைவனுக்கு இணைவைத்து வணங்கும் சிலை வணங்கிகள், விக்கிரக ஆராதனைக்காரர்கள், வேதத்தை உடையவர்கள் என அழைக்கப்படும் யூத, கிறிஸ்தவர்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய 'முர்தத்'கள் உட்பட நாஸ்திகர்கள், மதநம்பிக்கையற்ற கம்யூனிஸ வாதிகள் போன்றோரும் அடங்குவர். 


Share

Friday, April 2, 2010

ஹஸ்ரத் பாத்திமா அவர்களின் இல்லம்



 ஹஸ்ரத் பாத்திமா அவர்களின் இல்லமே இது

Share

Friday, March 26, 2010

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார்

பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
Share

Saturday, March 20, 2010

கிரிக்கெட் என்றால் உண்மையில் என்ன ?



நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள், 

Share

Monday, March 15, 2010

இஸ்லாத்தில் உள்ள அறிவியல் அற்புதங்கள் - 01

அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). “இஸ்லாத்தில் உள்ள அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.


Share

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”, டாக்டர் பெரியார்தாசன் அவர்களின் விளக்கம்



“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில்

Share

Tuesday, March 9, 2010

பெண்களின் ஆடை எவ்வாறு அமைதல் வேண்டும்

பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றி அல்குர்ஆனும் ஸுன்னாவும் விளக்குகின்றன.


1. அவ்ரத்

பெண் முழுமையாக மறைப்புக்குரியவள், அவளின் முழு உடலும் அவ்ரத் ஆகும் என்ற ஸுனனுத் திர்மிதியில் பதிவாகியுள்ள ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் ஆடை அணிதல் வேண்டும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

Share

Common Mistakes Made In The Way Men Dress: In And Outside Prayer

இப்பதிவு தமிழ் இல்லை மன்னிக்கவும்

Here are some notes on the subject that were prepared from a book by Shaikh Mashoor Hasan Salmaan.

1. Praying in tight clothes so that they press over the private parts ('awrah)

Praying in tight fitting clothes is deemed Makrooh according to the Sharee'ah. It also harms the body and hence it is not good from the point of view of health as well. Perhaps the one praying in such clothes actually leaves parts of his prayer out.

It is known that many people who dress in such a way do not attain their prayer at all while others attain only a little, like the prayer of a hypocrite.

Those who pray, many amongst them nowadays dress in clothes that are excessively tight around one or both of their private parts (their thighs and backside)

Ibn Hajr says, that a group of the Hanafee scholars considered such practice as makrooh. [See Fathul-Baari 1/476]

If this is the case for normal trousers then what is the case when they are very tight?

'Allaamah al-Albaanee explained that trousers have two problems:

a) This is a dress that resembles the disbelievers. Muslims used to dress in wide bottoms (saaraweel) which were loose fitting and baggy like some still do so in Syria and Lebanon. The Muslims adopted this practice of wearing trousers/pants when they were colonized. When the colonizers departed, they left behind this evil influence and changed the Muslims due to the their ignorance.

b) This type of dress constricts and presses upon the 'awrah. The 'awrah of a man is from his navel up to his knee. The worshipper should be as far away as he can from disobedience of Allah during his prayer. He is prostrating (in obedience and submission) to Him. How can he be praying and standing before His Lord, when his buttocks are showing and what is between is visibly magnified?

It is surprising to find many young Muslims taking exception to ladies wearing tight clothes since they cling to their bodies, yet these young men are forgetting about themselves. There is no difference between a lady wearing tight clothes, which press against her body and a man wearing trousers, which also cling to his body. The buttock of both a man and a woman are part of the 'awrah and both of them are the same. So it is compulsory for the youth to be warned about this predicament about which, many of them are blind, except for he whom Allah has guided, which by the example set, seems to be a few. [Taken from one his tapes]

The Messenger (sallAllahu 'alaihi wa sallam) forbade a man from praying in his trousers (saaraweel) unless he had a wrapper (rida) on him. [Abu Dawud, al-Haakim and the hadeeth is Hasan]

For more details please consult the following:

"Saheeh-ul-Jaami'-us-Saghe
er" of 'Allaamah al-Albaanee "Sharh ma'aani-ul-aathaar" of Imaam at-Tahaawee Shaikh Hamood at-Tuwayjiree's discussion about it in his book which talks about how resemblance of the mushrikoon has befallen upon many in "Al- Iidaah wa-tibyaan.."

As long as the trousers are wide and not tight the prayer is valid, but it is better to have a shirt or a top, one that covers between the navel and the knee, or lower still onto the middle of his shins, or down to just above his ankles, because that is the complete covering.

'Allaamah Ibn Baz has a fatwah where he says that it is permissible to pray in trousers so long as the 'awrah is not pressed against due to its expansiveness and his backside is not shamelessly visible. If his backside becomes visible then the prayer is invalidated and if only the clothes press against his 'awrah then it is makrooh.

2. Praying in thin and transparent clothing

Just like it is makrooh to pray in tight fitting clothes which cling to the 'awrah, it is not permissible to pray in thin clothes which are transparent enough to make the (actual) body visible. [Fataawaa Rasheed Ridaa 5/2056]

Praying in sleeping suit or pyjamas:

Abu Hurairah (radhiAllahu 'anhu) reports that a man stood up to the Prophet (sallAllahu 'alaihi wa sallam) and asked him about praying in a single garment. So he (sallAllahu 'alaihi wa sallam) said, "Unless you find two garments." Then he asked 'Umar (radhiAllahu 'anhu) who said, "When Allah is generous, be generous yourselves. A man prayed in a lower garment (izaar) and an upper garment (ridaa), a waist wrapper (izaar) and a shirt (qamees), in a lower wrap (izaar) and an outer garment with full length sleeves (qaba`), in trousers (saraaweel) and an upper wrap (ridaa), in trousers and a shirt (qamees), in trousers and upper garment (qaba`), in tubbaan and qaba`, and in tubbaan and qamees. [Bukhaaree, Maalik in al-Muatta, Muslim, Abu Dawud, Nan-Nisai, Ibn Maajah, al-Humaidee, Ahmad in al-Musnad, at-Tayaalisee, at-Tahaawee, al-Baghawee, Abu Nu'aim, al- Khateeb]

'Abdullaah ibn 'Umar (radhiAllahu 'anhu) saw Naafi' praying by himself in a single garment (thawb). So he said to him, "Can you not wear two garments?" He said, "Of course". He said, "Do you go out to the market in a single garment?" He said, "No". He said, "Allah has more right that He is dressed up for!" [at-Tahaawee in "Sharh ma'anee-ul-aathaar", "Tafseer-ul-qurtubee" and "al-mughnee"]

Such is the case for one who prays in his night garments. He would feel shy to go to market in it on account of its thinness and transparency.

Ibn 'Abdul-Barr said in "at-tamheed" : "The people of knowledge love for one to be enveloped in his garments; that he beautifies himself for his prayer as much as he is able with regards to his clothes, applies perfume and cleanses his teeth (miswaak)."

On the topic of conditions for the correctness of the prayer, the jurists (fuqahaa) talk about the condition of covering the 'awrah: They make the condition for the covering to be thick and say it is not permissible to make it fine so that the skin tone is visible. ["al-majmoo'", "al- mughnee", etc]

This is a requirement whether for a man or a woman, whether praying alone or in congregation. So whoever's clothes reveal his 'awrah in spite of his ability to keep it covered, then his prayer is invalidated.

"Yaa banee aadama khudhoo zeenatakum 'inda kulli masjidin..."

"O Children of Adam! Take your adornment (by wearing your clean clothes), while praying..."
[Qur'an -A'raf Aayah 31]

According to "Ad-deenul-khaalis" 2/101 and "at-Tamheed" 6/379 the aim of zeenah (adornment) is the thawb and the command means to conceal the 'awrah for every prayer.

Praying in a light tunic:

Some people pray in garments that only lightly cover their bodies and its transparency allows one to see the person's skin colour, while not wearing anything underneath. (It is not enough to wear shorts or trunks underneath unless it covers the extent between the belly-button and the knee.) The statement of Umar previously shows usage of more than one garment to screen oneself and how one garment is added to another. The evidence shows that it is compulsory (waajib) to be properly covered and praying in only one garment is allowed only because of the person's circumstances (poverty). The prayer of someone in two garments is better than doing so in one. This has been clearly elaborated by Qaadhi 'Iyaadh who has dispelled the differences regarding this matter. [See Fathul-Baari, al-majmoo' 1/476 and Nayl-ul-awtaar 2/78, 84]

Imaam Shaafi'ee said if a person prays in his shirt and it reveals him, then his prayer is invalidated. [See al-Umm 1/78]

Even worse for ladies:

The lady doing that is in a more terrible situation than the man. And if she prays in a loose outer garment with sleeves and slit in front then it is better for her to wear her jilbab on top. She must make sure she does not pray wearing delicate material such as nylon or chiffon.

Consider the hadeeth where we are told how in the last part of the nation of Muhammad (sallAllahu 'alaihi wa salam) there will be ladies who are "dressed yet they are naked."

Ibn 'Abdul-Barr says such women will dress in light material which will cover them yet not screen them, so they will be dressed in name but naked in reality. ["Tanweer-ul-hawaalik" 3/103]

A report from Hisham ibn 'Urwah shows once Mundhir ibn Zubair sent a beautiful garment from Kohistan to Asma bint Abi bakr who having felt the material and disapprovingly asked for it to be sent back to the sender. When asked as to why since it did not show the body, she replied it was transparent. [Ibn Sa'd in "at-tabaqaat-ul-kubra" 8/184: saheeh]

As-Safaareenee said it is forbidden to wear clothing that is light and fine so that the 'awrah is not covered whether for a male or a female. This is a matter of the Sharee'ah without any difference. ["ad-deen-ul-khaalis" 6/180]

Ash-Shawkaanee said in "Nayl-ul-awtaar" 2/115 that it is compulsory (wajib) for a lady to cover her body with a garment which is not transparent. This is a condition for covering the 'awrah.

3. Praying in long and overflowing lower garment (practicing isbaal or being a musbil)

Abu Hurairah (radhiAllahu 'anhu) said: "While a man was praying with his lower garment hanging down the Messenger (sallAllahu 'alaihi wa sallam) said to him, "Go and do wudhu." So he went, performed ablution and came back. He (sallAllahu 'alaihi wa sallam) said, "Go and do wudhu." So a man said to him, "O Messenger of Allah! Why do you ask him to do wudhu?" So he remained silent about him. Then he said, "He was praying while his lower garment was hanging down (i.e., he was a musbil)." [Abu Dawud, Musnad Ahmad, An-Nisai in Sunan al-Kubra, an-Nawawi]

'Abdullaah ibn 'Umar (radhiAllahu 'anhumaa) reported that the Messenger of Allah (sallAllahu 'alaihi wa sallam) said, "Allah does not look at the prayer of a person who lets his lower garment flow out of pride" [Ibn Khuzaimah]

Ibn Mas'ood (radhiAllahu 'anhu) said he heard the Messenger of Allah (sallAllahu 'alaihi wa sallam) say, "Whoever lets his lower garment hang down (over or below the ankles) from vanity then there is neither ease from Allah nor anything blessed." [Abu Dawud and in 'Allaamah Albaani's Saheeh Jaami'-us-Sagheer]

This means there is no forgiveness for him or honor for him with Allah. He does not preserve himself from the evils of his actions. It is also said that this means he does not (really) believe with regards to what Allah has made permissible and forbidden. Also, some say it means he has freed himself from Allah and become separated from His Deen. For further details and discussion on the understanding presented, please consult "Faidh-ul-Qadeer" and "Al-Majmu'".

The Shafi's and Hanbalis reckon the tradition is a proof that it is forbidden to let the lower garment drop below (the top of the ankles) in prayer when done out of pride, and according to the Shafi's it is objectionable when no vanity is intended. [See "Al-Majjmu'" and "Nail-ul-Awtaar"]

For a detailed discussion on this please consult "Majmoo' al-Fataawa" of Ibn Taimiyyah, "Fathul-Baari", and "'Awn-al-Ma'bood" where you will find the explanation that it is indeed forbidden to practice isbaal whether with pride or without it.

Shaikh Ahmed Shaakir pursued this matter in his verification of authenticity of prophetic reports (hadeeths) in Ibn Hazm's "al-Muhalla" and showed how the author had left out the first hadeeth which is a strong proof that the prayer of a musbil is invalid.

Ibn al-Qayyim elaborated about the first hadeeth and said letting the lower garment flow is sinful. The man was ordered to perform ablution and pray because ablution puts out the heat of sinfulness.

At-Teebi explained the man was asked to do ablution although he was clean so that he would consider the reason why he was ordered so. Allah blessed the request of the Prophet in that such outward cleanliness will cleanse the stain of arrogance inside, because exterior cleanliness affects the inward cleanliness.

Ibn Taimiyyah in his "Majmoo' al-Fataawa" emphasised that it is the same whether one practices isbaal of his trousers, or lower wrap or shirt (qamees). It is obligatory for every Muslim to leave isbaal and fear Allah about it.

'Allaamah Ibn Baz's discussion on isbaal

'Allam Ibn Baz was asked whether it is correct to pray behind an innovator (mubtadi') and one who is a musbil and he said:

"The prayer is correct behind the innovator and the one who is a musbil and (one who has some) other sin according to what is more right from what the scholars say, as long as it is not a bid'ah of disbelief (kufr) for the person. If it is a bidah of disbelief like that of a Jahmee and similar to that, which takes a person outside the fold of Islaam, then it is not correct to pray behind such people. However, it is obligatory for those responsible (amongst the people) that they choose the imam to be of a pleasing character and safe from bid'ah and immorality. (This is) because being an imam is a great (and important) trust (amaanah). He stands as an example to the Muslims by it. Thus it is not permissible to render its custodianship to the people of innovation and immorality when others are able to be appointed."

Isbaal is totally sinful which is necessary (wajib) to avoid and warn against it because of the statement, "Whatever hangs below both ankles from the lower garment (izaar) is in the Fire." [Bukhaari, An-Nisai]

Whatever is like the izaar also comes under the same judgement, like the shirt (qamees), trousers, cloak (woollen - basht) and similar to that. It is authentic from the Messenger of Allah (sallAllahu 'alaihi wa sallam) that he said, "Allah will not speak to three (types of people), nor will He look at them on the Day of Judgement, nor will He purify them, and they will have a painful punishment: the person who is a musbil with regard to his garment, ... ..." Muslim brings this in his Saheeh.

When the person does so with izaar or something similar due to pride and arrogance then that makes him even more strong in sinning and draws him nearer to the punishment, since the Prophet (sallAllahu 'alaihi wa sallam) said, "Whoever lets his garment flow (upon and beneath the ankles) due to vanity Allah will not look at him on the Day of Judgement."

It is compulsory for every Muslim to be on guard against what Allah has forbidden for him with regards to isbaal and other sins.

[Mujallat-ud-Da'wah No. 913]

4. Rolling up the garment in prayer

One of the mistakes of some of those who pray is that they tuck up their garments before starting their prayer.

It is reported from Ibn 'Abbaas (radhiAllahu 'anhumaa) that the Messenger of Allah (sallAllahu 'alaihi wa sallam) said, "I have been ordered to prostrate upon seven (bones) and that I neither tuck up the hair nor the garment (thawb)." [Muslim, An-Nisai, Ibn Khuzaimah]

Ibn Khuzaimah interpreted this narration with a chapter heading "Prevention from tucking up the garments in prayer".

An-Nawawi said the scholars are in agreement that it is not permissible to pray while his garment is rolled up or his sleeve or anything similar. [Sharh Saheeh Muslim]

Imaam Maalik said that if his clothes are already like that since he was doing a job and he rolled it up for that work and he started his prayer as he is, then there is no harm that he prays in that condition.

However, if he only does that to tuck up his hair or garment then there is no good in it. [Al-Mudawwanat-ul-Kubra]

An-Nawawi continued to say that the prohibition of hemming the garment is that of strong dislike. If he prays like that then he does evil although his prayer is correct. This is supported by At-Tabari where he speaks of a consensus by the scholars and Ibn-ul-Mundhir who takes recourse to Hasan Al-Basri.

5. Praying without covering the head

It is permissible to pray in bare head for a man. The head is 'awrah for a woman. However, it is recommended (mustahab) that he is completely dressed for prayer. This includes covering the head with a cap, or turban or something similar from what is customary from his clothes.

Uncovering the head without excuse is detested (makrooh) especially in the compulsory prayers and even more especially in congregation.

'Allaamah Albaani said: "As for what I see, it is makrooh to pray with the head bare and this is indisputable. It is recommended for Muslims to enter the prayer in full Islamic manner of dressing because of the hadeeth, "Allah has more right that you beautify for Him." [At-Tahawi, At-tabraani, Al-Baihaqi. See Silsiltus-Saheehah]

"This is not from the good manners from the customs of the Salaf to have the head uncovered and walk like that on the road, and enter places of worship like that, but it is from the ways of the foreigner which has infiltrated the Islamic lands when the disbelievers set foot in it, and imported their corrupt custom and the Muslims imitated them in it. So repel it and its likes... ... This is an extraordinary accident and it is not appropriate that it should warrant contradicting the prior Islamic culture, and be taken as an excuse for permission to pray without head-covering."

Then 'Allaamah Albaani goes on to explain the mistake of some brothers in Egypt who brought the proof of the permissibility to pray without covering the head by analogising with how the head is uncovered for someone in ihraam during the pilgrimage. This is wrong since not covering the head during the pilgrimage is from the law (Sharee'ah) of Allah. If their analogy was right them they should make it compulsory to pray without any head covering at all since it is obligatory to do so during the pilgrimage! [Tamaam-ul-Minnah fee ta'leeq 'alaa fiqh-us- Sunnah by 'Allaamah Albaani]

It is not established at all that the Messenger (sallAllahu 'alaihi wa sallam) ever prayed outside the pilgrimage with bare head, without a turban/cap. Whoever thinks he did so then he should bring the proof. If he (sallAllahu 'alaihi wa sallam) had done so, it would have been recorded.

Let it be known that it is just makrooh for a man to pray with bare head. [Al-Majmoo' - Al-Baghawi etc.]

PS: The narration attributed to Ibn 'Abbaas that the Prophet (sallAllahu 'alaihi wa sallam) would sometimes remove his cap and place it as a sutrah in front of him is weak (da'eef). Even if it was authentic then it does not prove praying in bare head since it is compulsory and more important to take a sutrah and it is more evident that he did that to make up for lack of any suitable sutrah.

6. Praying in clothes which has pictures on it

A'isha (radhiAllahu 'anha) said that (once) the Messenger of Allah (sallAllahu 'alaihi wa sallam) prayed in a woolen garment which had markings on it. When he finished his prayer he said, "Go to Abu Jahm ibn Hudhaifah with this garment and bring me an inbijaaniyyah, because this has distracted me too much in my prayer." [Bukhaari, Muslim, Nisai, Ibn Maajah, Muatta of Maalik]

The inbijaaniyyah that the Messenger of Allah (sallAllahu 'alaihi wa sallam) desired is a thick garment which has no markings or pattern on it unlike the khameesah (woolen garment which he was wearing at the time) which he rejected and it had such markings. And patterns are more preferable than pictures.

At-Teebi said while commenting on the above narration that pictures and similar things, which can be seen, affects the pure hearts and clean souls. [See "'Umdatul-Qaari" and "Fathul-Baari"]

Anas (radhiAllahu 'anhu) said that (once) A'isha (radhiAllahu 'anha) had a curtain which she used to screen a side of her house. The Prophet (sallAllahu 'alaihi wa sallam) said to her, "Remove it from me, because its pictures keep on turning my attention away from my prayer." [Bukhaari]

The above narration presents a difficulty when viewed against the other hadeeth also from A'isha (radhiAllahu 'anha) which says that the Messenger of Allah (sallAllahu 'alaihi wa sallam) would not enter the house which had a screen/curtain with pictures on it. [Muslim] This is resolved by knowing that this narration is talking about pictures of living creatures on the material while the first narration is not about such.

The above hadeeth of Anas (radhiAllahu 'anhu) is evidence that it is makrooh to pray in a garment which has pictures on it.

From the above evidences al-Qatalaani said in "Irshaad-ul-Saari" if the picture distracts a person praying in front of it then it is more so when he is clothed in such garments. Al-'Aini in "'Umdat-ul-Qaari" noted about the chapter in Bukhaari "Dislike of praying where there is a picture" that this means this chapter (by Bukhaari) explains that it is makrooh to pray in the house which has a garments with pictures on it. Thus if it is makrooh to do so in such case then it is worse when dressed in such material.

The jamhoor hold the position that it is makrooh.

Their evidence is the narration from A'isha (radhiAllahu 'anha) who said: "I had a garment with pictures on it which I had spread out and the Messenger of Allah (sallAllahu 'alaihi wa sallam) was praying towards it. So he said, "Take it away from me." So I (cut it into pieces and) made (some) screens (out of it). [Muslim, Nisai]

After mentioning this hadeeth an-Nawawi said, "As for the garment which has a picture or a cross or whatever draws the attention away, then praying in it or towards it or on it is makrooh due to the hadeeth."

7. Praying in saffron dyed clothes (Saffron colour is red or bright orange-red)

'Abdullaah ibn 'Umar (radhiAllahu 'anhumaa) said that the Messenger of Allah (sallAllahu 'alaihi wa sallam) saw him dressed with two saffron coloured garments. So he said, "This is the dress of the disbelievers, so do not clothe yourself with it." [Muslim, Musnad Ahmad]

In one narration he (sallAllahu 'alaihi wa sallam) said to him, "Did your mother order you to wear it?" I said, "Shall I wash them both?" He said, "Rather burn them both!"

Yet another narration says, "So I did that."

In another narration it says how he was seen by the Prophet (sallAllahu 'alaihi wa sallam) in a garment stained with saffron dye so he was told, "What is this garment that is upon you?!" So he understood by that its dislike and went home and found them heating up the stove to cook meat and threw the garment into it. Then he went to the Prophet (sallAllahu 'alaihi wa sallam) the next day and he said, "What have you done with your garment?" So when he had told him, he said, "Why didn't you clothe some of your family with it? There is no harm in the ladies using it." [Musnad Ahmad, Abu Dawud, Ibn Maajah]

It is reported from Anas (radhiAllahu 'anhu) that the Prophet (sallAllahu 'alaihi wa sallam) forbade the man from wearing saffron (clothes). [Bukhaari]

'Ali (radhiAllahu 'anhu) said the Prophet (sallAllahu 'alaihi wa sallam) forbade from saffron dyed clothes. [Muslim, Nisai, Abu Dawud]

Ibn Qudaamah said, "Concerning praying in red garments, our companions have said it is makrooh for a man to clothe in it and pray in it." [Al-Mughni]

Ibn-ul-Qayyim discusses this in "Zaad-ul-Ma'ad" and says it is indeed very strongly disliked although still permissible. Allah granted refuge from it to the Prophet (sallAllahu 'alaihi wa sallam) when he wore a blood-red garment and now there is doubt as to the true meaning of red cloth.

At-Tabraani in "Al-Awsat" discusses the red garment of the Prophet (sallAllahu 'alaihi wa sallam) and says it is a mistake to think the garment was pure red and not mixed with anything else. This red garment was a Yemeni costume woven with red and yellow thread like all such Yemeni costumes. It is called red due to the red thread in it. As for pure red then this is strongly forbidden.
Share

Friday, March 5, 2010

இறந்தவர்களுக்காக குர்ஆன்,யாஸீன் போன்றவற்றை ஓதலாமா?

"மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு ஒன்றும் இல்லை" (அல்குர்ஆன், 053:039)   
இந்த வசனத்தை ஆதாரமாகக்கொண்டு இறந்தவர்களுக்காக தர்மம் செய்தால் அந்தப் பலன் இறந்தவரைச் சென்று அடையாது என்ற ஒரு கருத்து மார்க்க அறிஞர்களிடையே இருக்கிறது. எனினும் மரணித்தவரின் சார்பாக வேறொருவர் தர்மம் செய்தால் அதற்கான நன்மை மரணித்தவருக்குக் கிடைக்குமா? என்பதை நபிமொழிகளின் வெளிச்சத்தில் சற்று விரிவாகக் காண்போம்.


"மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்றுச் செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. (அவை)
1. நிலையான அறக்கொடை
2.பயன்பெறப்படும் கல்வி
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை" என்று 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
"மனிதன் முயற்சித்ததைத் தவிர அவனுக்கு வேறில்லை" என்ற திருக்குர்ஆன் 053:039 வசனத்தின் விளக்கமாகவே இந்த நபிமொழி அமைந்திருக்கிறது.

1, நிலையான அறக்கொடை.
பள்ளிவாசல், கல்விக்கூடம், மருத்துவமனை, மக்கள் தங்குவதற்காக சத்திரம், கிணறு, நிழற்கொடை, தண்ணீர் பந்தல், சுமைதாங்கி இது போன்ற மக்கள் பயன்பெறும் அறக்கொடைகளைச் (வக்ஃப்) செய்தவருக்கு அவர் இறந்த பின்னும் அதற்கான நன்மைகள் அவருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்.
 

2, பயன்பெறும் கல்வி
கல்வி என்பதில் கல்வி நிலையம் சென்று கற்பதும், தொழில் ரீதியாக தனி ஒரு மனிதரிடம் கல்வி கற்பதும் இதில் அடங்கும். இதன் மூலம் கல்விச் சேவைத் தொடர்கிறது. ஒருவர் தான் கற்ற கல்வியைக் கொண்டு நல்ல வழியில் முன்னேற்றம் அடைந்து பயன் பெறுகிறார் என்றால் அந்தக் கல்வியைப் பயிற்றுவித்தவருக்கும் அதில் நன்மை கிடைக்கும்.
 
3, நல்ல குழந்தைகள்
இறந்தவருக்காக அவரின் நல்ல சந்ததிகள் செய்யும் பிரார்த்தனைகளாலும் அவருக்கு நன்மைகள் சென்றடையும். ஸாலிஹான - நல்லப் பிள்ளைகளாக வளர்ப்பதில் தந்தையின் கல்வி - போதனைகளின் முயற்சி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இறந்தவருக்காக சென்றடையும் நன்மைகளில் இந்த மூன்று விஷயங்களிலும் இறப்பதற்கு முன்னர் அவர் செய்த முயற்சிகள் இருப்பதால் 053:039வது இறைவசனத்திற்கு இந்த ஹதீஸ் பொருத்தமாகவே இருக்கிறது. மேலும், இறந்தவர் விட்டுச் சென்றச் சொத்திலிருந்து தர்மம் செய்தால் அத்தர்மத்தின் நன்மையும் அவருக்குக் கிடைக்கும். என கீழ்வரும் நபிமொழிகள் அறிவிக்கின்றன.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் ''என் தந்தை சொத்துகளை விட்டுவிட்டு இறந்து போனார். அவர் இறுதி விருப்பம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால் அவருக்கு அது பரிகாரம் ஆகுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆம்'' என்றார்கள். (முஸ்லிம்)
 

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இறுதி விருப்பங்கள் தெரிவிக்காமலேயே என் தாயார் திடீரென இறந்து விட்டார். அவர் (இறப்பதற்கு முன்பு) பேச முடிந்திருந்தால் தர்மம் செய்(யச் சொல்லியிருந்)திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அவருக்கு நன்மை உண்டா?'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ''ஆம்'' என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
 

இதிலிருந்து இறந்தவர் விட்டுச் சென்றச் சொத்துக்களிலிருந்து வேறொருவர் தர்மம் முதலான நல்ல காரியங்களைச் செய்தால் அதன் நன்மைகள் அவருக்குச் சென்று சேரும் என்பது விளங்கிக் கொள்ள முடிகிறது.

''நோன்புகள் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவர் சார்பாக அவர் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுதற்கு அதிகத் தகுதி படைத்தது'' என்று கூறினார்கள். (புகாரி)


இறந்தவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவது
அவர்களுக்குப் பின் வந்தோர் ''எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!... (அல்குர்ஆன், 059:010)

''இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கு வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக!''... என்று நபி(ஸல்) அவர்கள் ஜனஸா தொழுகையில் துஆச் செய்வார்கள். (அபூதாவூத், இப்னுமாஜா திர்மிதீ, நஸயீ)
 

''இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக!'' (முஸ்லிம்)
"இறந்து விட்ட நல்லடியார்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்" என ஒவ்வொருத் தொழுகையிலும் பிராத்தனை செய்ய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்திருக்கிறார்கள்.


எனவே இறந்தவர் சார்பாக தர்மம் செய்யலாம், உணவு வழங்கலாம், நோன்பு நோற்கலாம், அவருக்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரலாம். இஸ்லாத்தில் இதற்கான ஆதாரங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. ஆனால் இறந்தவர் சார்பாக யாஸீன் சூராவை ஓதலாம் என்றோ, குர்ஆன் ஓதி இறந்தவருக்காக ஹதியா செய்தால் அதன் நன்மைகள் அவரைச் சென்றடையும் என்றோ இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை!

இறந்தவரின் மையத்துக்கு அருகில் யாஸீன் சூராவை ஓதுங்கள் என்பது போன்று இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது தொடர்பாக வரும் நபிமொழிகள் பலவீனமானவைகளாகும்.

''உங்களில் இறந்தவர் மீது யாஸீன் ஓதுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஃகில் பின் யாஸர்(ரலி) அறிவிக்கும் செய்தி அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம் ஆகிய நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களில் அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை வழியாக அறிவிக்கிறார். அபூ உஸ்மானும், அவரது தந்தையும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.
 
பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் மஃகில் பின் யாஸர்(ரலி) வழியாக ஒரு மனிதர் கூறுவதாக அறிவிக்கப்படுகிறது. ஒரு மனிதர் என்றால் யார் என வரலாறு தெரியாததால் அவரது நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடியாது. எனவே இதுவும் நம்பகமானச் செய்தி என்ற தன்மையை இழந்து பலவீனமடைகிறது.
''மரணத்தை நெருங்கியவரின் அருகில் யாஸீன் ஓதினால் அவரது வேதனை இலேசாக்கப்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று முஸ்னத் அல்ஃபிர்தவ்ஸ் என்ற நூலில் உள்ள அறிவிப்பில் இடம்பெறும் ஸாலிம் பின் மர்வான் என்பவர் பலவீனமானவர்.

''இறந்தவரின் தலைமாட்டில் அல்ஹம்து சூராவையும், கால்மாட்டில் பகரா அத்தியாயத்தின் கடைசி வசனங்களையும் ஓதுங்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தப்ரானியின் அல்கபீர் என்ற நூலிலுள்ள அறிவிப்பில் அய்யூப் பின் நஹீக் என்பவரும், யஹ்யா பின் அப்துல்லாஹ் என்பவரும் பலவீனமானவர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

எனவே இறந்தவருக்காக யாஸீன் ஓதுங்கள், குர்ஆன் ஓதுங்கள் என வரும் ஹதீஸ்களெல்லாம் பலமற்றவை. ''நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்'' (புகாரி, முஸ்லிம்) என்ற எச்சிரிக்கையை நினைவில் பதிவு செய்து, இஸ்லாம் ஏவாத எந்தக் காரியத்தையும் செய்வதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இறந்தவர்களின் மறுவுலக நன்மைக்காக செய்ய வேண்டியவற்றை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டிய வழியில் செய்வதே சிறப்பு.

உயிருடனிப்பவர் குர்ஆனை ஓதினால் அவருக்கு நன்மை உண்டு!
"குர்ஆன் வசனம் ஓதப்படும் போது அதை செவிதாழ்த்தி கேளுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்".(7 : 204) என்றதன் அடிப்படையில் ஓதுவதை செவிமடுத்தால் செவிமடுப்பவர் அருள் செய்யப்படுவார். 
 
மரணத்தருவாயில் அல்லது மரணத்திற்கு முன் செவியேற்க்கும் நிலையில் ஒருவர் இருக்கும் போது அவருக்கு அருகில் ஒருவர் திருகுர்ஆனின் வசனங்களை ஓதி அவர் செவியேற்பாராயின் மேற்கண்ட வசனத்தின் அடைப்படையில் நன்மை கிடைக்கலாம். ஆனால், "மரணித்தவரைச் செவியேற்கச் செய்ய உம்மால் கூட இயலாது" என நபி(ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்.

மரணித்தவரால் குர்ஆனை ஓதவும் முடியாது, ஓதுவதைக் கேட்கவும் முடியாது. மேலும், "இது நேர் வழிகாட்டும்" என குர்ஆன் பற்றி இறைவன் கூறுகிறான். வழிகாட்டல் என்பது உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் அவசியம். இறந்தவர்களுக்கல்ல! ஓதப்படுவதைச் செவியேற்கும் நிலையிலேயே இல்லாதவருக்கு, வழிகாட்டல் என்ற வகையில் கூட எவ்வித நன்மையும் இல்லை.

Share

Sunday, February 28, 2010

மீலாது விழா கொண்டாட முடியுமா?



فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيم

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

Share

வியாபார நுணுக்கங்களின் தகவல்கள் சில

முதலில் சுத்தம்
தொழில் ஆற்றும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் , உடை சுத்தமாக இருக்க வேண்டும், சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது.


 
Share

Saturday, February 20, 2010

நிழல் தந்த மரமும் மனிதனும்

ஒரு ஊர் ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று வளர்ந்து கிளை பரப்பி  மிக அழகாக இருந்தது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் பொதுவாக எப்போதும் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து உண்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.

Share

Friday, February 19, 2010

Is Something Bothering You




Share

Tuesday, February 16, 2010

இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்



இளசுகளின் மனம் மறந்தவிடாது அலைபாயும் ஒரு தினம் என்றால் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினம்!


பெப்ரவரி மாதத்தை பொறுத்தவரை எமது நாட்டுக்கு முக்கியமான ஒரு மாதம். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கிறிஸ்தவ ஆங்கியர்களுக்கு அடிமைப் பட்டு கிடந்து சுதந்திரம் அடைந்த மாதம்.
Share

Sunday, February 14, 2010

சபித்தல்


  • பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும்.

'....ஒரு மூமினை சபித்தவன் அவனை கொலை செய்தவன் போலாவான்' என்பது நபிமொழி. ஸாபித் பின் ழஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் உள்ளது.

  • பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். இதில் ஆபத்தானது என்னவெனில் அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிரார்த்தித்தவனாகின்றான்
Share

சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்




சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்

  • இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) (56:20,21)
  • உணவு அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச்செழி)க்கவும் வைக்காது அன்றியும் பசியையும் தணிக்காது. (88:6,7)
நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள் அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும் (76:5)
பானம்

  • அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும். அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான். எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும். எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன். அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு. (14:16,17)
  • அவர்களின் மீது ஸுன்துஸ்இஸ்தப்ரக் போன்ற பச்சை நிறபூம்பட்டாடைகள்இருக்கும்இன்னும் அவர்கள் வெள்ளியாலாகியகடகங்கள்அணிவிக்கப்பட்டிருப்பர்அன்றியும்அவர்களுடைய இறைவன்அவர்களுக்குப்பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)

  • ஆடை (முஃமின்களும்முஃமின்களல்லாதவருமான)இரு தரப்பாரும்தம்இறைவனைப் பர்ர்ர்றித் தர்க்கிக்கின்றனர்ஆனால்எவர்இறைவனை)நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்துஆடைகள்தாயாரிக்கப்படும்கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல்ஊற்றப்படும். (22:19)
(
  • அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்சிரித்தவையாகவும்,மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80:38,39)

  • தோற்றம் ஆனால் அந்நாளில் - (வேறுசில முகங்கள்அவற்றின் மீதுபுழுதிபடிந்திருக்கும். (80:40)

  • (பொன்னிழைகளால்செய்யப்பட்ட கட்டில்களின் மீது -ஒருவரையொருவர்முன்னோக்கியவர்களாக,
அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (56:15,16)
  • படுக்கை அவர்களுக்கு நரகத்தில் (நெருப்புவிரிப்புகளும், (போர்த்திக்கொள்வதற்குஅவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும்உண்டு - இன்னும்இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலிகொடுப்போம். (7:41)

  • எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோஅவர்கள்கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டுவரப்படுவார்கள்அங்கு அவர்கள்வந்ததும்அதன் வாசல்கள்திறக்கப்படும்அதன் காவலர்கள் அவர்களை நோக்கிஉங்கள் மீது சாந்திஉண்டாகட்டும்நீங்கள் மணம் பெற்றவர்கள் எனவேஅதில்பிரவேசியுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்றுஅவர்களிடம்கூறப்படும்). (39:73)
"
  • வரவேற்பு "நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள் என்றென்றும்அதில்தங்கிவிடுங்கள்என்று (அவர்களுக்குக்கூறப்படும் பெருமைஅடித்துக்கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (39:72)

  • அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில்உங்களைபிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆர்ருகள்ஓடிக்கொண்டிருக்கும்அன்றியும்நிலையான அத்னு என்னும் நிலையானசுவர்க்கச் சோலைகளின்மணம் பொருந்திய இருப்பிடங்களும்(உங்களுக்குஉண்டு இதுவே மகத்தானபாக்கியமாகும். (61:12)

  • தங்குமிடம் அது சுட்டெரிக்கும் நெருப்பாகும் (101:11)

அவர்கள் நரகில் கருகுவார்கள் (83:16)

  • அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்துவைக்கப்பட்டுள்ளகண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தைஎந்தஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது. (32:17)

முன்னேற்பாடு மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதானையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)

  • அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்அவர்கள் அதிலிருந்துமாறி (வேறிடம்செல்ல விரும்ப மாட்டார்கள். (18:108)
  • நிரந்தரம் நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும்எவர்கள்நிராகரிக்கிறார்களோஅவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் -அதில்என்றென்றும்இருப்பார்கள் -இத்தகையவர்கள்தாம்
படைப்புகளில் மிகக் கேட்டவர் ஆவார்கள். (98:6)
Share
Related Posts with Thumbnails